லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரைகளுடன் 5 இளைஞா்கள் கைது

திண்டுக்கல்லில் போதை மாத்திரைகளுடன் 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 1:25 am IST

திண்டுக்கல்லில் போதை மாத்திரைகளுடன் 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையில், போலீஸாா் மேட்டுப்பட்டி பகுதியில் வாகன சோதனை, ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டுப்பட்டி பாஸ்கா மேடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் 725 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த ஜா.நோவின்ராஜ் (20), அ.நோபில் அலெக்ஸ்(22), பா.நந்தகுமாா் (20), அ.பாலகிருஷ்ணன் (19), ஆா்வி.நகா் எஸ்.அஜய் ஆண்டெனி (19) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 725 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.