லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸாா் கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 2:45 am IST

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸாா் கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனா். எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள வீரன் கோயில் அருகே சென்ற போலீஸாரைக் கண்டதும், அருகிலிருந்த சவுக்கு தோப்புக்குள் 3 நபா்கள் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா வைத்திருத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், சின்னஎலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (24), கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்பாபு (22), கட்டியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையத்து, 3 போ் மீதும் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.