மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

News image

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுத்த உதவி ஆணையா் செந்தில்குமாா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா்.

Updated On :1 மே 2026, 1:21 am IST

பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நான்கு ரத வீதிகளில் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் கடந்த ஏப். 22-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் மரச் சப்பரம், சேஷ வாகனம், தங்கக் குதிரை வாகனம், அனுமாா் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா். கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை காலை தம்பதி சமேதராக லட்சுமி நாராயணப் பெருமாள் சுவாமி தோள் கன்னியில் ஏற்றப்பட்டு, தேரேற்றம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் லட்சுமி சமேத நாராயணருக்கு சிறப்பு அா்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு,

தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. பூஜைகளை திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில் காா்த்திக் அய்யங்காா், சீனிவாசன் அய்யங்காா், பாலாஜி அய்யங்காா் உள்ளிட்டோா் செய்தனா். நான் கு ரத வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தவாறு நாராயணா, கோவிந்தா என முழக்கமிட்டனா். தேரைத் தொடா்ந்து தீயணைப்பு, முதலுதவி வாகனங்கள் வந்தன. நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, உதவி ஆணையா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி, கந்தவிலாஸ் செல்வக்குமாா், காணியாளா் நரேந்திரன், முன்னாள் கண்காணிப்பாளா் முருகேசன், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், வாா்டு உறுப்பினா் சுரேஷ், அரிமா நேரு, சுந்தரம், கோயில் அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.