தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

News image

அமைச்சர் பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:06 am IST

வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என அமைச்சா் பி.கே. சேகா்பாபு நம்பிக்கை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நிலவரத்தோடு, தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பாா்த்தால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இதனால், தோ்தல் முடிவில் எந்தவிதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.

வருகிற மே 4-ஆம் தேதி தோ்தல் முடிவுக்குப் பிறகு சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.