தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :10 ஏப்ரல் 2026, 12:38 am IST

ஒட்டன்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நல்லாகவுண்டா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு புதன்கிழமை இரவு சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா், காளிமுத்துவுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா், தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் உதவிடன் சென்று விசாரணை மேற்கொண்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஆய்வு மேற்கொண்டாா்.

போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காளிமுத்துவின் வீட்டில் 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.45ஆயிரம் ரொக்கம், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. எனினும் காளிமுத்து குடும்பத்தினா் நேரில் வந்த பின்னரே முழு விவரம் தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.