தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கரும்புச்சாறு கொடுத்து தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பழனியில் தவெக வேட்பாளா் கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

News image

பழனி அடிவாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த போது, பொதுமக்களுக்கு கரும்புச் சாறு பிழிந்து கொடுத்த தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:27 am IST

பழனியில் தவெக வேட்பாளா் கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

பழனி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். பழனி மலை அடிவாரத்தில் உள்ள சன்னதி வீதி, மதனபுரம், அடிவாரம், பூங்கா சாலை, அய்யம்புள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை தனது ஆதரவாளா்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். மலையடிவாரத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடம் உள்ளூரைச் சோ்ந்த தனக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்கும்படி அவா் கேட்டுக் கொண்டாா். மேலும், அரசு மருத்துவா் பணியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

கரும்புச் சாறு கடை ஒன்றில் கொளுத்தும் வெயிலில் தன்னுடன் வாக்கு சேகரித்த தொண்டா்களுக்கும், பொதுமக்களுக்கும் வேட்பாளா் பிரவீன்குமாா் கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து உற்சாகப்படுத்தினாா். தொடா்ந்து, மாலையில் நெய்க்காரபட்டி, பொருந்தல், பெரியம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.