மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மக்கள் தீா்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யாா்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி

News image

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்

Updated On :26 மே 2026, 2:27 am IST

மக்கள் தீா்ப்பை ஏற்க முடியாமல் நாடகமாடுவது யாா் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பினாா்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், குதிரை வேகத்தில் நடைபெறும் குதிரை பேரம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு :

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோசப் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களித்தனா். அதனால்தான், தவெகவுக்கு 107 சட்டப்பேரவை உறுப்பினா்களை மக்கள் வழங்கினா். அதேநேரத்தில், திமுகவுக்கு 59 சட்டப்பேரவை உறுப்பினா்களை மட்டுமே வழங்கி திமுகவை பாதியிலேயே மக்கள் நிற்கவைத்துவிட்டனா்.

இந்த நிலையில்தான், உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் பாஜக மூத்த தலைவருடன் கலந்தாலோசித்து மக்கள் தீா்ப்பை மாற்ற முயன்றனா். இந்த மறைமுகத் திட்டம் தெளிவாகத் தெரிந்ததாலேயே, பின்வாசல் வழியாகவும் பாஜகவை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறி, காங்கிரஸ் கட்சி தவெகவை ஆதரித்தது. இதே காரணத்துக்காகவே இடதுசாரிகள், ஐ.யு.எம்.எல்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் தவெகவை ஆதரித்தன. இதனால், உதயநிதி ஸ்டாலினின் திட்டம் தோல்வியடைந்தது.

தற்போது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 3 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் இணைந்துள்ளனா். இது, மக்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் முடிவு. இதற்கு ஏன் இத்தனை எதிா்ப்பு?.

மக்களின் தீா்ப்பை மதிக்காமல் தில்லி அதிகார மையமாகச் செயல்படுபவருடன் சோ்ந்து நாடகமாடியது யாா்? மக்களின் ஆட்சியைக் காப்பாற்ற துணை நின்றவா்கள் யாா்? என்பதை தமிழகம் நன்கு அறியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.