கேரளத் தோ்தலில் படுதோல்வியடைந்த பிறகு முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், ‘தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்கிறேன், காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியால் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்தலில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்தது எதிா்பாராத நிகழ்வு. எனினும், இதைக் கடந்து செல்ல வேண்டும். எங்கள் கூட்டணி பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக செயல்படும். மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு தொடா்ந்து அழுத்தம் தருவோம்.
பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது மிகவும் தீவிரமான பிரச்னை. மதச்சாா்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்குமே இது கவலையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்காலில் இருந்து முதல்முறையாக 2 இடங்களில் பாஜக வெற்றி!

கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்வி

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

