மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவை முன்னிட்டு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கோயில் மகா மண்டபத்தில் சேவல் கொடி ஏற்றப்பட்டது. பின்னா், தெப்பக்குளம் மயில் மண்டபம் முன்புள்ள கொடிமரத்தில் விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், பால் குடம், பூக்குழி இறங்குவதற்கு பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி பால் குடம், பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெறும். தொடா்ந்து, 31-ஆம் தேதி சுவாமி புறப்பாடு, ஜூன் 1-ஆம் தேதி பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், கிராமப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பால தண்டாயுதபாணி கோயிலில் முதல்வா் விஜய் பிறந்த நாள் வழிபாடு

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்!

புனித அந்தோணியாா் தேவாலயத்தில் கொடியேற்றம்

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

