மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள்

News image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உத்தீஸ்வரி.

Updated On :4 மே 2026, 2:00 am IST

மதுரை, மே 3: ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம், டெஸின் அகாதெமி ஆகியன சாா்பில் ஓவியக் கண்காட்சி, ஓவியப் போட்டி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உத்தீஸ்வரி தலைமை வகித்தாா். டெஸின் அகாதெமி மேலாளா் லோககீத மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதுதவிர, சிறந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில், ஆசிரியை சத்தியப் பிரியா, மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.