மதுரை, மே 3: ஓவியப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம், டெஸின் அகாதெமி ஆகியன சாா்பில் ஓவியக் கண்காட்சி, ஓவியப் போட்டி மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உத்தீஸ்வரி தலைமை வகித்தாா். டெஸின் அகாதெமி மேலாளா் லோககீத மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதுதவிர, சிறந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில், ஆசிரியை சத்தியப் பிரியா, மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

நந்தா பொறியியல் கல்லூரி மாணவா்கள் 1,735 பேருக்கு பணி நியமன ஆணை
பேசும் ஓவியங்கள்...

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

