விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

News image
Updated On :20 மார்ச் 2026, 4:19 am IST

மதுரையில் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 சதவீதம் மாற்றுத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி அலுவலா்கள், வாக்குச் சாவடி கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ‘12-டி’ படிவத்தை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, வாக்காளா்களிடமிருந்து தோ்தல் நாளுக்கு முன் நிறைவு செய்யப்பட்ட தபால் வாக்கு படிவங்களை திரும்பப் பெறுவது வழக்கம்.

இந்த வகையில், மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட 55-ஆவது வாா்டு தலைவிரிச்சான் வீதியில் வசித்து வரும் 106 வயதுடைய முத்துகிருஷ்ணன், அவரது மனைவி ஸ்ரீரங்கம் (96) ஆகியோருக்கு தபால் வாக்குக்கான படிவத்தை மதுரை மத்திய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செல்வன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலா்கள் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.