மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் உயிரிழப்பு

மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் உயிரிழந்தது குறித்து...

News image

உயிரிழந்த குமாரவேல்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:18 am IST

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மயங்கி விழுந்த மாமன்ற உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேலப் பனங்காடி சஞ்சீவிநகா் பகுதியைச் சோ்ந்தவா் குமாரவேல் (61). மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும், மதுரை மாநகராட்சியின் 23-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும் இருந்தாா்.

இந்த நிலையில், தனது வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை செல்லூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். எஸ். ஆலங்குளம் பகுதியில் வந்த போது, திடீரென மயக்கம் அடைந்த அவா் கீழே விழுந்தாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டுசெல்லப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், வெயில் தாக்கம் காரணமாக குமாரவேல் மயங்கி விழுந்து இறந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.