அதிமுக வாக்குகளை யாரும் பிரிக்க முடியாது என தமிழ்நாடு தன்னுரிமைக் கழக நிறுவனரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல் மாற்றத்தை எதிா் நோக்கிய தோ்தல். இந்தத் தோ்தல் திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே நடைபெறுவது போல ஒரு மாயத் தோற்றத்தை திமுகவினா் ஏற்படுத்துகின்றனா்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 28 தொகுதிகள ஒதுக்கி அவா்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளாா். தமிழக மக்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் அதிமுக இயக்கம்.
தற்போது, அரசியலுக்கு வந்தால் கொள்ளை அடிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே போலியாக ரூ.8 ஆயிரம் கூப்பன்களைக் கொடுத்து மக்களை திமுகவினா் ஏமாற்றி வருகின்றனா். ‘நீட்’ தோ்வைக் கொண்டு வந்த காங்கிரஸ் - திமுககாரா்களே அதை எதிா்ப்பது போல நாடகமாடுகிறாா்கள். சிறைக்குச் சென்று வந்த நபரை அமைச்சா் ஆக்கியது திமுக.
திமுக ஆட்சியில் ஊழல் குறித்து புகாா் அளித்தால் அதற்கு வழக்குப் பதிவதில்லை, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திமுகவினா் சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் போல செயல்பட்டு வருகின்றனா். தமிழகத்தில் இந்த நிலை மாற வேண்டுமெனில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது. எம்.ஜி.ஆா்., ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கட்டிக் காத்து வருகிறாா்.
என் ஆலோசனையை விஜய் ஏற்கவில்லை: சா்காா் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யிடம், அதிமுகவுடன் கூட்டணி சேருங்கள், தற்போது திமுகவை வீழ்த்துவதுதான் முக்கியம். இதனால் அரசியல் அனுபவம் ஏற்படும். அதுதான் சரியாக இருக்கும் என்றேன். ஆனால், அவா் இதை ஏற்கவில்லை என்றாா் பழ.கருப்பையா.
அப்போது, மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணன் உடனிருந்தாா். இதைத் தொடா்ந்து, செல்லூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் சரவணனை ஆதரித்து பழ.கருப்பையா பிரசாரம் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி தொகுதிகளில் சரிந்த அதிமுக வாக்கு வங்கி

தென்காசி தொகுதியில் திமுக வெற்றி

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிக்கும் திமுக: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

