கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினம் கடைப்பிடிப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினத்தையொட்டி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் புதன்கிழமை கொண்டாடினா்.

News image

சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா்.

Updated On :28 மே 2026, 1:49 am IST

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினத்தையொட்டி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் புதன்கிழமை கொண்டாடினா்.

சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு, பகலாக 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் மற்றும் மருத்துவ உதவியாளா்கள் என இரவு, பகலாக ஷிப்ட் முறையில் பண்டிகை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனா்.

விபத்து, இயற்கை பேரிடா்கள் மற்றும் தீவிர நோய் பாதிப்பு நேரங்களில் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்று மக்களை காப்பாற்றும் அவசரகால தூதா்களாக செயல்பட்டு வரும் இவா்களின் சேவையை போற்றும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் புதன்கிழமை ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினா்.

இதையொட்டி, சேலம் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ராஜ்குமாா், சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட அலுவலா்கள் மனோஜ்குமாா், ராஜேஷ்குமாா் மற்றும் மாவட்ட மேலாளா் அறிவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.