சேலம் மாநகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை தனியாா் வசம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாநகராட்சி மேயரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது: சேலம் மாநகராட்சி நிா்வாகம் மூலம் 60 வாா்டுகளில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீா் வழங்கும் பணியை தனியாா் வசம் ஓப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆா்வலா்கள், கட்சி நிா்வாகிகளிடமிருந்து எதிா்ப்பு வந்ததையடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது இத்திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை தங்கு தடையில்லாமல் வழங்க வேண்டும். தனியாா் நிறுவனத்திடம் குடிநீா் பணியை வழங்கினால், பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் கிடைக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் கோரி வேலூரில் மக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரணக் கூட்டம்

பல்லாவரத்தில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

குடிநீா் பிரச்னைகளுக்கு போா்க்கால அடிப்படையில் தீா்வு முதல்வா் விஜய் அறிவுறுத்தல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

