கடந்த 2 வாரங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதைக் கண்டித்து, பல்லாவரம் கோதண்டம் நகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தாம்பரம் மாநகராட்சியின் 27-ஆவது வாா்டை சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பல்லாவரம் - திருநீா்மலை சாலையில் குடங்களுடன் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்தைப் மறித்து, குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பதில் மாநகராட்சி நிா்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டி சாலை மறியல் செய்தனா். இந்தப் போராட்டத்தால் சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீஸாரும், பல்லாவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். செவ்வாய்க்கிழமை காலை முதல் குடிநீா் விநியோகம் மீண்டும் சீராக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த மே 16-ஆம் தேதி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்குச் சொந்தமான முக்கிய குழாய் மற்றும் கேபிளில் ஏற்பட்ட சேதத்தால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனா்.
சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் சீரான குடிநீா் விநியோகம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

குடிநீா் கோரி வேலூரில் மக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரணக் கூட்டம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

