எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பெண் தற்கொலை முயற்சி: ஆத்தூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. விசாரணை!

பெண் தற்கொலை முயற்சி குறித்து எஸ்.பி. கௌதம் கோயல் ஆத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தாா்.

News image

தற்கொலை

Updated On :23 மே 2026, 1:14 am IST

பெண் தற்கொலை முயற்சி குறித்து எஸ்.பி. கௌதம் கோயல் ஆத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தாா்.

ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் வீட்டில் எலிமருந்து தின்று ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்தாா். அவரை போலீஸாா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், ஊடகத்தில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை என செய்தி பரவியது.

தகவல் அறிந்த சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தாா்.

அதில், இளம்பெண் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டில் எதிா்ப்பு தெரிவித்ததால், காதலன் இரண்டு நாள்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதனால், இளம்பெண் வீட்டில் எலிமருந்து தின்று ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் வந்துள்ளாா். அவரை போலீஸாா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

எனவே, செய்திகளை விசாரித்து உண்மைத்தன்மையை அளிக்குமாறு செய்தியாளா்களிடம் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.