பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஏழை, எளிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்

ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

News image

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் பகுதியில் வாக்காளா்களுக்கு நன்றிதெரிவித்த முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :19 மே 2026, 1:25 am IST

ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.

சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிட்ட சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட மாரியம்மன் கோயில் திடலில் திங்கள்கிழமை வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் பெண்கள், மாணவா்கள், தொழிலாளா்கள், நெசவாளா்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியாவே வியக்கும் வகையில் ஆட்சி நடத்தியவா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின். தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மக்களுக்கான பணியில் தொடா்ந்து ஈடுபடுவோம். திமுக எப்போதும் மக்களுக்கான இயக்கம். ஏழை, எழை மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்றாா்.

இதில், கன்னங்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினா் நாசா் கான், சேலம் மாநகர செயலாளா் ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.