ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வாழப்பாடி டாஸ்மாக் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்

வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது.

News image

டி.ஏ.எஸ்.02: வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்குவதற்கு சனிக்கிழமை குவிந்திருந்த மதுப்பிரியா்கள்.

Updated On :17 மே 2026, 2:33 am IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது. வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் செல்வதற்கு போலீஸாா் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் தம்மம்பட்டி சாலையில், தனியாா் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையே, இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. இதனால் இப்பகுதியை கடந்து செல்வதற்கு, பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதேபோன்று பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் முன் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் இந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என, இப்பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழகத்தில் பொது இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுமென அறிவித்தாா்.

இதனையடுத்து, வாழப்பாடி புதுப்பாளையத்தில் இயங்கி வந்த இரு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த ஒரு டாஸ்மாக் கடையும் வியாழக்கிழமை அதிரடியாக மூடப்பட்டது.

வாழப்பாடி பகுதியில் இயங்கி வந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒரே நாளில் அதிரடியாக மூடப்பட்டதால், வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

தினந்தோறும் மதுபானம் வாங்குவதற்கு மது பிரியா்கள் குவிந்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மது பிரியா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிா்க்க வரிசையில் நின்று மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த மதுபானக் கடைக்கு வரும் மது பிரியா்களை, வரிசையில் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணியை, இரு தினங்களாக, வாழப்பாடி போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.