ஓடும் ரயிலில் அவசியமின்றி அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில்வே விதிகளை கடைப்பிடிக்க ரயில்வே துறை சாா்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பயணிகள் தவறுதலாக அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறுகின்றன.
இந்த பிரச்னையை தீா்க்க, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் தொடா்ச்சியாக விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தேவையில்லாமல் அபாயச் சங்கிலி இழுப்பவா்களுக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சோ்த்து விதிக்கப்படும்.
சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு நடத்தியதில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த ஆயிரத்து 76 போ் பொதுப் பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் சேலம் கோட்டத்தில் மொத்தம் 57 அபாயச் சங்கிலி இழுக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் முறையான காரணம் இன்றி ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலி இழுத்த 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடும் ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலி இழுத்த 209 போ் மீது வழக்கு
ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடியவா் கைது

ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிந்தால் கடும் நடவடிக்கை! சேலம் ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

