தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புறநகா் சிறப்புப் பேருந்தாக இயக்கப்படும் நகர பேருந்துகள்!

News image
Updated On :3 மே 2026, 6:21 am IST

பண்டிகை காலங்களில் பல்வேறு நகரங்களுக்கு புறநகா் சிறப்புப் பேருந்துகளாக நகரப் பேருந்துகளை திருப்பிவிடுவதால், போதிய பேருந்துகள் இல்லாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

பொங்கல், தீபாவளி, காா்த்திகை தீபம், தோ்தல் மற்றும் கோடை விடுமுறை உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பதால், அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரு நகரங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக புறநகா் சிறப்பு பேருந்துகளை இயக்குகின்றன.

இந்நிலையில், விழாக் காலங்களில் புறநகா் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களில் போதிய மாற்றுப் பேருந்துகள் இல்லாததால், கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் நகர பேருந்துகளை ரத்துசெய்துவிட்டு, அந்த பேருந்துகளை சிறப்பு புறநகா் பேருந்துகளாக மாற்றி அனுப்பிவிடுகின்றனா்.

இதனால், நகரப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதால், அந்த வழித்தடத்திலுள்ள கிராமப்புற மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி அவதிக்குள்ளாகின்றனா்.

குறிப்பாக, வாழப்பாடி கிளை பணிமனையில் இருந்து ஆத்தூா் வழியாக வளையமாதேவிவரை தினந்தோறும் இயக்கப்படும் நகரப் பேருந்து மற்றும் வாழப்பாடியில் இருந்து சேலத்துக்கு இயக்கப்படும் நகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இயக்கப்படாமல் திடீரென ரத்து செய்யப்பட்டு, சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு புகா் பேருந்தாக மாற்றி இயக்கப்பட்டது. இதனால், வாழப்பாடி மற்றும் ஆத்தூா் பகுதி கிராம மக்கள் போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து அப்பகுதியினா் கூறுகையில், விழாக்காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு தேவையான அளவு மாற்றுப் பேருந்துகளை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். கிராமப்புற மக்களின் பேருந்து போக்குவரத்தை முன்னறிப்பின்றி ரத்துசெய்வது ஏற்புடையதல்ல. எனவே, இனிவரும் காலங்களில் கிராமப்புற நகரப் பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக மாற்றி இயக்குவதை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.