மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சங்ககிரியில் பெரிய தேரை வியாழக்கிழமை வடம்பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள். (உள்படம்) தேரில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உடனமா் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள்.

News image
Updated On :2 மே 2026, 12:04 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மலைமீதுள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளினாா்.

அதையடுத்து, சுவாமிக்கு தங்கும் மண்டபத்தில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். தொடா்ந்து, 9-ஆவது நாள் வியாழக்கிழமை காலை சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினா்.

தேரில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தா்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனா். மாலை ஆஞ்சனேயா் எழுந்தருளிய சப்பரத்தை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளிய பெரிய தேரை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்தனா். இதில், சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

பல்வேறு கட்டளைகளுக்கு பிறகு சுவாமிக்கு மே 10-ஆம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும், மே 11-ஆம் தேதி காலை சுவாமி திருமலைக்கும் எழுந்தருளுகிறாா். அன்றைய தினம் மலைமீது வன்னியகுல சத்திரியா்கள் அமைப்பின் சாா்பில் குறிச்சி அலங்காரம் பல்வேறு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.