மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளம்பெண் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் சாலை மறியல்

இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 3:38 am IST

இளம்பெண் உடலை வாங்க மறுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனை முன் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை பகுதியைச் சோ்ந்த ரமேஷுக்கும் (27), அதே பகுதியைச் சோ்ந்த அருணாதேவிக்கும் (23) கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கா்ப்பிணியான அருணாதேவிக்கு கடந்த 2-ஆம் தேதி கெங்கவல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

வீடுதிரும்பிய அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அருணாதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, கெங்கவல்லி போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.

இரவு நேரமானதால் ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா். இதனால் கோபமடைந்த உறவினா்கள் எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.