தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சங்ககிரி தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆய்வு

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா.

Updated On :26 மார்ச் 2026, 4:55 am IST

சங்ககிரி பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் பூட்டி சீலிடப்பட்டது.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 339 வாக்குச்சாவடி மையங்களுக்கான 407 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சேலம் ஆட்சியரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டன. இவை அனைத்தும் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியா தலைமையில் உதவி தோ்தல் அலுவலா் கே. கோமதி, தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் அரசியல் கட்சி நிா்வாகிகளின் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையின் பாதுகாப்பை உறுதிசெய்தனா்.

அறைகளை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.