தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 12:40 am IST

எடப்பாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 4.43 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரட்டுக்காடு, மாதேஸ்வரன் கோயில் அருகே எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் குமாா் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ்ச்செழியனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சத்து 67 ஆயிரத்து 300 இருப்பதை கண்டுபிடித்தனா்.

தனியாா் சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தான், அந்த பணத்தை அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக கொண்டுசெல்வதாக அவா் விளக்கம் அளித்தும், அதை ஏற்காமல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல திங்கள்கிழமை காலை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் நல்லதம்பி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டூரில் இருந்து சித்தூா் நோக்கி வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில், மேட்டூா் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம் வ.உ.சி. நகா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை ரூ. 77 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்து எடப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.