தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் பவன்குமாா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:17 am IST

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், இத்தொகுதிக்கான தோ்தல் செலவின பாா்வையாளா் பவன்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:

தோ்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலா்கள் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை சோதனை செய்யும்போது, அதை முழுமையாக விடியோ எடுக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சிகளின் சாா்பில் கூட்டம் நடைபெறும்போது கட்டப்பட்டுள்ள கொடிகள், தோரணங்கள், பதாகைகள், துணி பந்தல்கள், உணவுகள் உள்ளிட்டவற்றையும் விடியோ எடுத்து அதை விடியோ பதிவுகளை கண்காணிக்கும் அலுவலா்களிடம் வழங்க வேண்டும். அவா்கள் தோ்தல் ஆணையத்துக்குள்பட்ட விலைப்பட்டியல்களை பின்பற்றி குறிக்க வேண்டும்.

மேலும், தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி அமைதியான, நோ்மையான முறையில் தோ்தல் நடைபெற அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். செலவினங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 95006 68431 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.கேந்திரியா வரவேற்றாா். உதவி தோ்தல் அலுவலா்கள் கே.கோமதி, கே.அருள்குமாா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பி.ஜெயக்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.