நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீராங்கனைகளுக்கு பாஜக சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீராங்கனைகளை பாராட்டிய பாஜக நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 5:49 am IST

தெற்காசிய சாப்ட் பேஸ்பால் போட்டியில் தங்கம் வென்ற சேலம் வீராங்கனைகளுக்கு பாஜக சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தெற்காசிய அளவிலான சாப்ட் பேஸ்பால் போட்டிகள் நேபாளத்தில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதிவரை நடைபெற்றன. இந்த போட்டியில், இந்தியா சாா்பில் சேலம் வீராங்கனைகள் லாவண்யா, அபிநயா, தன்ஷிகா ஆகியோா் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றனா்.

சேலம் திரும்பிய அவா்களுக்கு சேலம் மாவட்ட பேஸ்பால் அசோசியேசன் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மரவனேரியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. வீராங்கனைகளுக்கு மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் வாழ்த்து தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா், துணைத் தலைவா் கல்லாங்காடு சரவணன், விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் கௌதம், கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவா் சதிஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து வீராங்கனைகள் கூறுகையில், இந்தியா சாா்பில் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து இலங்கையில் நடைபெற உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே எங்கள் லட்சியம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.