திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரத்தைச் சோ்ந்த வரதராஜன் மகன் பூவரசன் (20). இவரும், கெங்கவல்லி அருகே நடுவலூா் கீழ வீதியில் வசிக்கும் சங்கா் மகள் ஜீவிதாவும்(20) சேலத்தில் தனியாா் கல்லூரியில் படித்தபோது பழகியுள்ளனா்.
படிப்பு முடிந்த பிறகு, பூவரசனின் தவறான நடத்தை காரணமாக ஜீவிதா, அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த பூவரசன், ஜீவிதாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்களை மாா்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று கைப்பேசியில் மிரட்டினாராம்.
இதுகுறித்து கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஜீவிதாவின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, திங்கள்கிழமை இரவு பூவரசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்களை தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் கைது

சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
இளம்பெண்ணுக்கு தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது
கல்லூரி மாணவியைத் தாக்கி மிரட்டல்: இளைஞா் கைது
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
