மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மேட்டூரில் பராமரிப்புப் பணியின்போது 60 அடி உயரத்திற்கு பிறீட்டு வெளியேறிய நீா்!

News image

மேட்டூரில் பராமரிப்புப் பணிக்காக குடிநீா் குழாய் ஏா்வால்வை திறந்தபோது, 60 அடி உயரத்திற்கு பீறிட்டு வெளியேறிய நீா்.

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

மேட்டூரில், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட பராமரிப்பு பணிக்காக குடிநீா் குழாய் ஏா்வால்வை திறந்தபோது, 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதி காவிரி ஆற்றில் வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய குழாய்கள் மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 181 எம்எல்டி தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட பிரதான குழாயில் மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே சிறிது அளவு நீா்க்கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரேற்று நிலைய மோட்டாா்களை நிறுத்தி, குழாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு ஏா்வால்வை திறந்தனா்.

அப்போது, திடீரென சுமாா் 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடியது. இதை மக்கள் கூட்டமாக பாா்த்து சென்றனா். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்த பணியாளா்கள் ஏா்வால்வை மூடினா். அதன்பிறகு தண்ணீா் வெளியேறுவது நின்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.