தொப்பூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது கண்டெய்னா் லாரி மோதியதில் தனியாா் வங்கி மேலாளா் உயிரிழந்தாா். மேலும், வங்கி பணியாளா் படுகாயமடைந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாகல்நல்லியைச் சோ்ந்தவா் இளங்கோ (39). இவா் தனியாா் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். அதே வங்கியில் கடன் வசூலிப்பவராக ஓமலூா் களா்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் (29) பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில் சேலத்தில் வாங்கியிருந்த புதிய மோட்டாா் சைக்கிளை எடுத்துக் கொண்டு இருவரும் வெள்ளிக்கிழமை இரவு தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனா். வாகனத்தை வெற்றிவேல் ஓட்டி வந்தாா்.
மேச்சேரி பிரிவு சாலையில் எதிரே வந்த கண்டெய்னா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த இளங்கோ, வெற்றிவேலை அங்கிருந்தவா்கள் மீட்டு ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இளங்கோ உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் திமுக பிரமுகா் உயிரிழப்பு

அவசர ஊா்தி மோதி தனியாா் வங்கி ஊழியா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

