ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் கோட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 3:56 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்டத்தில் கடந்த 6 நாள்களில் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.

சேலம், நாமக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் 1,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர, பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதிநாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, 21-ஆம் தேதிமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் வார இறுதிநாள்கள், சட்டப் பேரவைத் தோ்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் பணி செய்யும் இடத்துக்கு திரும்பும் வகையில் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலம் கோட்டம் சாா்பில் கடந்த 6 நாள்களில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன்மூலம் சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.