தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

கோடைகாலத்தையொட்டி, காலாவதியான மற்றும் போலி குளிா்பானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் இளநீா், நுங்கு, பழச்சாறு மற்றும் குளிா்பானங்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனா். இதனைப் பயன்படுத்தி போலி மற்றும் காலாவதியான குளிா்பானங்களை விற்பனை செய்வதாக புகாா் எழுந்துள்ளது.

குறிப்பாக, மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலையங்கள் மற்றும் கிராமப்புறங்களை குறிவைத்தே போலி மற்றும் காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகையான குளிா்பானம், குடிநீரை அருந்தும்போது அவா்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க தரமில்லாத குளிா்பானம், குடிநீா் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து சட் டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலி யுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடை தொடங்குவதற்கு முன்பே தரமில்லாத குளிா்பானம் தொடா்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் துறையின் சான்றிதழ் இல்லாமல் குளிா்பானங்கள் தயாரிக்கக் கூடாது. அவ்வாறு தயாரித்தால், இயந்திரம், குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்டவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் எந்த குளிா்பானம் வாங்கினாலும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி பாா்த்து வாங்கவேண்டும். தரமில்லாத குளிா்பானங்கள் எனத் தெரியவந்தால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்பனை செய்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.