போக்குவரத்து நெரிசலை குறைக்க தம்மம்பட்டியில் வட்டச்சாலை அமைக்கப்படும் என கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் நல்லதம்பி வாக்குறுதி அளித்தாா்.
கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியங்களில் திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
கெங்கவல்லி தொகுதியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளேன். பச்சமலையில் சோபனபுரம்- செங்காட்டுப்பட்டி இடையே தாா்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். எம்எல்ஏ காலத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். இதனால் இத்தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டச்சாலை அமைக்க பாடுபடுவேன் என்றாா்.
கெங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ், நகர அதிமுக நிா்வாகிகள், அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாக்கு சேகரிப்பின்போது உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

