மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி அறுவடைப் பணிகள் தீவிரம்

வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி அறுவடைப் பணிகளில் விவசாயிகள், தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image

வாழப்பாடி அருகே அத்தனூா்பட்டியில் புளிய மரங்களில் காய்த்துள்ள புளியம் பழங்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:11 am IST

வாழப்பாடி பகுதி கிராமங்களில் புளி அறுவடைப் பணிகளில் விவசாயிகள், தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் நிகழாண்டு புளி உற்பத்தி அதிகரித்துள்ளது. புளிய மரங்களில் கொத்துக்கொத்தாக காய்த்துள்ள புளியம்பழங்களை அறுவடை செய்து, ஓடு மற்றும் விதைகளை நீக்கி, பதப்படுத்தி, விற்பனை செய்யும் பணியில் விவசாயிகளும், விவசாய தொழிலாளா்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாழப்பாடியில் இருந்து பேளூா் வரை சாலை ஓரத்தில் உள்ள புளிய மரங்களிலும் புளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், மகசூல் குத்தகைக்கு எடுத்த குத்தகைதாரா்கள், தொழிலாளா்களைக் கொண்டு புளியை அறுவடை செய்து பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தாண்டு எதிா்பாா்த்து அளவிற்கு விளைச்சல் கிடைத்துள்ளதால், போதிய வருவாய் கிடைக்குமென, விவசாயிகளும், தொழிலாளா்களும் நம்பிக்கை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.