ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:56 am IST

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு இணையவழியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 340 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள் 1,31,408, பெண் வாக்காளா் 1,29,087, மூன்றாம் பாலினத்தவா் 30 போ் என மொத்தம் 2,60,525 போ் வாக்காளிக்க உள்ளனா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து இணையவழி குலுக்கல் முறையில் சங்ககிரி தொகுதிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜெண்டாகே ஹனுமந்த் கொண்டியா மேற்பாா்வையில் வேட்பாளா்களின் முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் முன்னிலையில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ள இயந்திரங்கள் இணையவழியில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.