தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:33 am IST

ஆத்தூா் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே கடந்த 2018-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆத்தூா் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கெங்கவல்லியைச் சோ்ந்த அங்கமுத்து (30), ராஜா (50), முகுந்தன் (24) ஆகிய 3 பேரையும் கைதுசெய்து, அவா்கள்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நீதிபதி மீனாட்சி வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட அங்கமுத்து, ராஜா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், முகுந்தனுக்கு 2 சட்டப் பிரிவின்கீழ் தலா 20 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா். மேலும், இதை ஏக காலத்தில் அவா் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.