தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 4:19 am IST

மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சோ்க்கப்பட்ட பெண் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த செக்கானூா் ஒட்டபள்ளி கரட்டை சோ்ந்தவா் சசிகுமாா் (40). பொக்லைன் வாகன ஓட்டுநா். இவரது மனைவி கலைச்செல்வி (36). இவருக்கு இனியா என்ற 7 வயது பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் 2ஆவது முறையாக கலைச்செல்வி கா்ப்பமானதால் பிரசவத்திற்காக மேட்டூா் அரசு மருத்துவமனையில் கடந்த 31-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா்.

அவருக்கு சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கலைச்செல்வி உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சசிகுமாா் அளித்த புகாரின்பேரில் மேட்டூா் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.