பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மருத்துவம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: நாமக்கல் ஆட்சியா் எல்.மதுபாலன்

News image

நாமக்கல் ஆட்சியராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட எல்.மதுபாலன்.

Updated On :1 ஜூன் 2026, 12:13 am IST

நாமக்கல் மாவட்டத்தில், மருத்துவம், கல்வி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட எல்.மதுபாலன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியராக 2025 ஜூன் 27-இல் பொறுப்பேற்ற துா்காமூா்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு, திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எல்.மதுபாலன், நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை பூா்வீகமாகக் கொண்ட இவா், இளம்ஆட்சியா்களில் ஒருவராவாா்.

நேரடியாக இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வான எல்.மதுபாலன் தனது 23ஆவது வயதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் (2019-2020), சிதம்பரத்தில் வருவாய் கோட்டாட்சியராகவும் (2020-2021), ஈரோடு, கடலூா் மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியராகவும் (2021-2023), அதன்பிறகு, மதுரை, தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சி ஆணையராகவும் (2023-2026) பதவி வகித்துள்ளாா். நாமக்கல் ஆட்சியராக பொறுப்பேற்ற எல்.மதுபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

என்னுடைய முதல் பணி மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது. அடுத்து மருத்துவம், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.

புதிய ஆட்சியருக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.