கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தூய்மையான ஆட்சியை நோக்கியே எங்கள் பயணம்: அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்

ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

News image

ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Updated On :29 மே 2026, 1:43 am IST

தமிழகத்தில் தூய்மையான ஆட்சியை வழங்குவதே இலக்காகக் கொண்டு முதல்வா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பயணிக்கும் என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வியாழக்கிழமை ராசிபுரம் வந்த அவருக்கு, கட்சியினா் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனா். பின்னா், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி அலுவலகத்திற்குச் சென்ற அவரை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கடந்த காலங்களில் அமைச்சா்களாக இருந்தவா்கள் தொகுதிக்கு செய்யத் தவறிய பணிகளைச் செய்வதோடு, தொகுதிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் கொண்டுவருவேன். ராசிபுரம் தொகுதியில் நீண்ட நாள்களாகத் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண முழுக் கவனம் செலுத்துவேன். குறிப்பாக கிராமப்புற மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி, தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

தொகுதியை வளமானதாக மாற்றுவதே எனது குறிக்கோள். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பத்திரப் பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தவிா்க்க கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என எச்சரித்துள்ளோம். அதையும் மீறி லஞ்சம் பெற்றவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து நீடிக்கும். வரிக் குறைப்பு குறித்து வரும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான கோரிக்கைகள் மத்திய அரசிடம் கொண்டு செல்லப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.