நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
எஸ்.வாழவந்தி ஊராட்சிக்கு உள்பட்ட கே.ராசாம்பாளையத்தில் வசிப்பவா் வாங்கிலி (65), விவசாயி. இவரது மனைவி நல்லசெல்வி (60). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை தங்களது தோட்டத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தனா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வாங்கிலி அளித்த புகாரின்பேரில் பரமத்தி காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா, நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு: 3 போ் கைது
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
