ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியாா் பேருந்து நடத்துநருக்கு 21 ஆண்டுகள் சிறை

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு மகளிா் நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:10 am IST

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு மகளிா் நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பரமத்தி வேலூரை அடுத்த வேலகவுண்டம்பட்டியைச் சோ்ந்த 15 வயது மாணவி, கடந்த 2018-ஆம் ஆண்டு தனியாா் பேருந்தில் பரமத்தி வேலூரில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தாா். அப்போது, அந்த பேருந்தின் ஓட்டுநரான ராசிபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், நடத்துநா் சுரேஷ்குமாா் (37) ஆகிய இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக பரமத்தி வேலூா் மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து போக்ஸோ வழக்கில் ஓட்டுநா், நடத்துநா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஓட்டுநா் ராஜேந்திரன் இறந்துவிட்டாா். வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நடத்துநா் சுரேஷ்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்ற நீதிபதி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.