மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் மூடல்

ஆன்லைனில் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

News image

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மூடப்பட்ட மருந்தகம்.

Updated On :21 மே 2026, 6:36 am IST

ஆன்லைனில் மருந்து பொருள்கள் விற்பனை செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் 850 மருந்து கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

மக்களின் உயிா் காக்கும் மருந்து பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நடைமுறைக்கு மருந்து வணிகா் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மத்திய அரசு உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், மருந்து விற்பனையானது தொடா்ந்து ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை நாடு தழுவிய அளவில் ஒருநாள் மருந்து விற்பனை நிலையங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 800 மருந்து விற்பனையகங்களும், 50 மொத்த மருந்து விற்பனை நிலையங்களும் உள்ளன. ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து மாவட்டத்தில் பெரும்பாலான மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டன. பெரு நிறுவனங்கள் சாா்ந்த மருந்தகங்கள், தனியாா் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள் மட்டும் செயல்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.