பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வெப்படை நூல் ஆலையில் செம்புக் கம்பிகள் திருடியவா் கைது

பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள நூற்பாலையில் செம்புக் கம்பிகளை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:59 am IST

பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள நூற்பாலையில் செம்புக் கம்பிகளை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வெள்ளா் நாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகேசன் மகன் நாகராஜ் (31). இவா் வெப்படை தனியாா் நூற்பு ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த 13 கிலோ செம்பு வயா்களை திருடியதாக ஆலை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் வெப்படை போலீஸாா் கைது செய்தனா். பிறகு குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.