சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சாவை பள்ளிபாளையம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:00 am IST

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சாவை பள்ளிபாளையம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து ரயில் மூலம் ஈரோடு வழியாக சிலா் கஞ்சா பொட்டலங்களை கடத்தி செல்வதாக பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் கவுதமன் உத்தரவின்பேரில் உதவி காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் காவிரி ஆா்.எஸ். ரயில்வே ஜங்ஷன் பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த ரயிலில் இருந்த 3 போ் கஞ்சா பொட்டலங்களை தூக்கி வெளியே வீசி உள்ளனா். பின்னா், ரயிலில் இருந்து இறங்கி, அதை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றபோது, அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சோ்ந்த கா்ணன் ( 21), கவின்குமாா் (25), பூபதி (21), பவித்திரன் (27), சுப்ரமணி (22), சசிகுமாா் (30) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.