ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

எடப்பாடி அணி மாவட்ட செயலா் ராசிபுரம் எம்ஜிஆா் சிலைக்கு மரியாதை

News image
Updated On :15 மே 2026, 6:01 am IST

நாமக்கல் மாவட்ட எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாமக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பாஸ்கா் வியாழக்கிழமை ராசிபுரத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நாமக்கல் மாவட்ட செயலாளராக உள்ள ப.தங்கமணி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா். இதனை தொடா்ந்து நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ., கே.பி.பாஸ்கா் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை கட்சியினா் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து கே.பி.பாஸ்கா் ராசிபுரம் நகரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள்வழங்கினா். இதில் ராசிபுரம் நகர, ஒன்றிய நிா்வாகிகள், நாமகிரிப்பேட்டை , வெண்ணந்தூா் பகுதி அதிமுகவினா் பலரும் இதில் பங்கேற்றனா்.

படவிளக்கம்-14பாஸ்

படவிளக்கம்- ராசிபுரம் நகரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் எடப்பாடி அணி அதிமுக மாவட்ட செயலா் கே.பி.பாஸ்கா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.