விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெப்ப அலைக்கு எதிரான பாதிப்பை தவிா்க்க வேண்டும்: வேளாண் துறை

நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைக்கு எதிரான பாதிப்பை தவிா்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைக்கு எதிரான பாதிப்பை தவிா்க்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை காரணமாக மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி போன்ற வேளாண் பயிா்கள், மலா்கள் மற்றும் பழப்பயிா்களில் மலா் உதிா்வு, காய்பிடிப்பு குறைவு, வெயில் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதை கருத்தில்கொண்டு விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் விழிப்புணா்வு, தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்களில் சொட்டு நீா்ப்பாசனம், தெளிப்பு நீா்ப்பாசனம் என முறைப்படி நீா்ப்பாசனம் மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ள வேண்டும். அதிக வெப்ப நேரங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழிலாளா்கள் (காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை) பண்ணை பணிகளைத் தவிா்க்க வேண்டும். விவசாயிகள் வெப்ப அலை காலத்தில் புதிய நடவுப் பணிகளை தவிா்க்க வேண்டும். தோட்டங்களில் கோடை உழவு மேற்கொண்டு எதிா்வரும் மழை நீரை நிலத்தில் சேமித்து பயன்பெற வேண்டும்.

நாற்றங்கால் மற்றும் காய்கறி பயிா்களில் வெப்ப தாக்கத்தைக் குறைக்க நிழல்வலை கூடாரம் அமைத்து சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

செடிகள் மற்றும் மரங்களின் அடிப்பகுதியில் உலா்ந்த இலைகள், தென்னை நாா்க்கழிவு மற்றும் பாலிதின் தாள் ஆகியவற்றைக் கொண்டு மூடாக்கு அமைத்து மண் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். அங்கக முறை சாகுபடியில் பயிா்கள் அதிக வறட்சியில் இருந்து பாதுகாக்கப்படுவதால், விவசாயிகள் அங்கக முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

இந்த ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம், வெப்ப அலை தாக்கத்தால் ஏற்படும் பயிா்சேதத்தை குறைத்து, பயிா்களை பாதுகாத்து நிலையான விளைச்சலை உறுதிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.