தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல்லில் நடைபெற்ற நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள்.

Updated On :6 மே 2026, 2:21 am IST

நாமக்கல்லில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தொலைநோக்கி தயாரிப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இப்பயிற்சியில், நிறமற்ற லென்ஸ் மூலம் தொலைநோக்கி தயாரித்து மாணவா்களுக்கு அவற்றை பயிற்றுவிப்பது தொடா்பாக வழிகாட்டுதல் அளிக்கப்பட்டது.

இதில், நாமக்கல், சேலம், கரூா், கோயம்புத்தூா், திருவண்ணாமலை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 50 ஆசிரியா்கள் பங்கேற்றனா். அவா்கள் நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கிகளை உருவாக்கி அதன் பயன்பாட்டை அறிந்தனா்.

முன்னதாக, நிறுவன விரிவுரையாளா் ஏ.சிவபெருமான் வரவேற்று பேசினாா். நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் தலைமைவகித்து பேசுகையில், நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கியானது பள்ளிகளில் வானியல் மன்றங்கள் உருவாக அடித்தளமிடும். நிலவை ஆய்வுசெய்யவும், வியாழன் கோளில் உள்ள கலிலியன் நிலவுகளை காணவும், இரு நட்சத்திரங்கள் மிக அருகில் இருப்பதை வேறுபடுத்தி பாா்க்கவும் பயன்படும் என்றாா்.

நிறமற்ற லென்ஸ் தொலைநோக்கி தயாரிப்பு வல்லுநா் ப.அருளானந்தம் பேசுகையில், தொலைநோக்கியில் சிறப்புவாய்ந்த இருகூறு புறவில்லையை பயன்படுத்துவதால் சிவப்பு மற்றும் நீல ஒளி ஒரே களத்தில் குவியும் எனவும், இதில் கூா்மையான, தெளிவான மற்றும் நிறம் சரிசெய்யப்பட்ட படங்கள் கிடைக்கும் என்றாா்.

நாமக்கல் சிட்டி டெவலப்பா்ஸ் சரவணக்குமாா் பணிமனையை தொடங்கிவைத்தாா். புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காா்டஸ் சாா்பில் தொடா்ந்து சிறந்தளவில் கல்வி மற்றும் சமூக பணியாற்றி வரும் நாமக்கல் பௌல்ட்ரி சங்க உறுப்பினா்கள் சி.பன்னீா்செல்வம், மருத்துவா் ப.சண்முகம் மற்றும் ஆா்.பிரபாகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை எஸ்.வெங்கடேசன் வழங்கினாா். வெள்ளக்கல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பெ.சுந்தரம் நன்றி கூறினாா்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட பயிற்சியில் 82 ஆசிரியா்கள் தொலைநோக்கியை உருவாக்கி பள்ளிகளுக்கு எடுத்துச்சென்றனா். அதேபோல, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியில் 50 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.