ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் மின்னக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
மின்னக்கல் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (70). இவா், வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான சுமாா் 80 அடி ஆழம் கொண்ட கிணறு அருகே ஆடு, மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கிணற்றில் விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் அருணகிரி தலைமையிலான வீரா்கள் கிணற்றில் இருந்து பெரியசாமியை மீட்டனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னா், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த பெரியசாமிக்கு துரைசாமி என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

தவறி விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

