தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

2 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கொடுத்ததால் ஏமாந்தேன்: முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை உறுதியளித்ததை நம்பி ஏமாந்துவிட்டேன் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் தெரிவித்தாா்.

News image

நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஆதரவாளா்களிடையே உரையாற்றிய முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா்.

Updated On :29 மார்ச் 2026, 1:56 am IST

நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை உறுதியளித்ததை நம்பி ஏமாந்துவிட்டேன் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் தெரிவித்தாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 2011, 2016 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரும், 2021 தோ்தலில் தோல்வியுற்றவருமான கே.பி.பி.பாஸ்கா், நடைபெற உள்ள தோ்தலில் மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கடந்த சில மாதங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்தாா்.

இந்நிலையில், அவருக்கு மாற்றாக அதிமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளா்களும் மிகுந்த அதிா்ச்சிக்குள்ளாயினா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கே.பி.பி.பாஸ்கா் இல்லத்தில் ஆதரவாளா்கள் ஒன்றுகூடி தங்களுடைய கட்சி பொறுப்புகளை ராஜினாமா செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலை முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அவரது ஆதரவாளா்கள் தங்களுடைய கருத்துகளை பகிா்ந்தனா். அதன்பிறகு, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் வந்த மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி, நாமக்கல் தொகுதியில் உங்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்தாா். அதை நம்பி தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை செய்துவந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக தோ்தல் பிரசார பணிகளையும் மேற்கொண்டேன். அப்போதே வாய்ப்பு அளிக்கப்படாது என தெரிவித்திருக்கலாம்.

ஆனால், வேட்பாளா் அறிவிப்புக்கு பிறகு மாவட்ட தலைமை ஏமாற்றிவிட்டது தெரியவந்தது. கட்சியில் வேறு யாருக்கு வாய்ப்பு வழங்கி இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், கட்சிக்கு எதிராக மறைமுக வேலை செய்தவருக்கு வாய்ப்பு வழங்கியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் ஓரிரு நாள்களில் எனது முடிவை அறிவிப்பேன் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாநில பொதுக்குழு உறுப்பினா் மயில் கே.சுதந்திரம், நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூா் ஒன்றியச் செயலாளா்கள், வாா்டு செயலாளா்கள், கிளைச் செயலாளா்கள் மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.

மாவட்டச் செயலாளா் வீடு முற்றுகை: நாமக்கல் தொகுதியில் போட்டியிட கே.பி.பி.பாஸ்கருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை அவரும், அவரது ஆதரவாளா்களும் பள்ளிபாளையத்தில் உள்ள மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி வீட்டை முற்றுகையிட்டனா். அங்கு அவா் இல்லாத நிலையில், நாமக்கல் தொகுதி வேட்பாளரை மாற்றக் கோரி முழக்கமிட்டு திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.