சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழா் கட்சியில் இணைந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். அவரது மனைவி கலைச்செல்வி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனிடையே வால்பாறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமாதேவி அறிமுக கூட்டம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மேத்யூ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, தனக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நாம் தமிழா் கட்சியில் இணைந்ததாகத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல் தோ்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக! யாருடைய வாக்குகள் சிதறின?

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

நாமக்கல் தொகுதியில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வெற்றி

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

